சுவிசேஷகர்கள் ஐக்கியம்
இயேசு விடுவிக்கிறார் சுவிஷேகர்கள் ஐக்கியம்...
நம்மைப் போல ஒன்றாய் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். சங்.133:11, யோவா. 17:21
சகோதர சிநேகம்
ஆண்டு முழுவதும் ஆண்டவருக்காக ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைக்கும் ஊழியர்கள் சற்றே இளைப்பாறவும் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து புது பெலனை பெற்றுக் கொõள்ளவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த சுவிசேஷகர்கள் ஐக்கியம்.
வருடந்தோறும் ஏப்ரல் மாதம் நான்காவது வாரத்தில் கன்னியாகுமரியிலுள்ள ஹோட்டல் சிங்காரில் இந்த ஐக்கிய கூடுகை ஓழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுவிசேஷகர்கள் குடும்பமாக அழைக்கப்படுகிறார்கள். நல்ல தங்கும் வசதி, தரமான உணவு அளிக்கப்படுகிறது. காலையில் மாத்திரம் நடைபெறும் கூடுகையில் சிறப்பு செய்தி வழங்கப்படுகிறது. பிறகு ஓய்வும் இயற்கை காட்சிகளை கண்டு களிக்கவும் நேரம் ஒதுக்கப்படுகிறது. இரவில் கூடி ஊழியர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
மாதம் ஒருமுறை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுவிசேஷகர்கள் ஒன்று கூடி ஜெபிக்கிறார்கள். ஒரு ஊழியருக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் இந்த ஐக்கியத்திலுள்ள எல்லாருக்கும் தெரியப்படுத்தி ஜெபிக்கவும் இயன்ற உதவிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஐக்கியத்திலுள்ளவர்களுக்காக சுவிசேஷகன் என்ற பத்திரிக்கை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அனுப்பப்படுகிறது.
இன்று : 72
நேற்று : 148
இந்த மாதம் : 4779
மொத்தம் : 59210


